இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அருட்காசு

படம்
உங்கள் முயற்சி முன்னேற்றங்களில் கடவுளின் முயக்கத்திற்கு அருள் வேண்டுவதற்கானது ஐந்திணைக் கோயில். ஐந்திணைக் கோயிலின் வெளியீடான அருட்காசு உங்களின் 1.உடல்நலம் 2.மனமகிழ்ச்சி 3.பொருளாதார முன்னேற்றம் 4.பயணஉதவி வண்டிகளில் பாதுகாப்பு 5.தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகியவை உங்களுக்குத் தொடர்ந்து கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக மந்திரம் ஊட்டப்பட்டது.  மந்திரம் ஊட்டப்படுவது காரணமாகவே அருட்சோறு (பிரசாதம்) போல, அருட்காசு என்று தலைப்பிடப்படுகிறது. உங்களுக்கு வழங்கப்படும் ஐந்து அருட்காசுகளில் முதலாவது காசை மட்டும் உங்களின் மந்திர அருட்காப்பிற்காக பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.  அருட்காசு பெற்றபிறகு, உங்களுக்கு புதிய வெற்றிகள் கிடைக்கப்பெறுவதை நீங்கள் உணரமுடியும். அந்தப் புதிய வெற்றிகளைக் கொண்டாடுவது, உங்களின் தொடர் வெற்றிகளுக்காக, உங்களுக்கும் கடவுளுக்குமான பாதையைச்  செப்பனிடுகிற முன்னெடுப்பு ஆகும். அந்த வெற்றியைக் கொண்டாடும் நோக்கத்திற்காக- மற்ற நான்கு காசுகளை- உறவுகள், நட்புகள், உங்களுக்குத் தெரிந்தவர்கள் ஆகியோருக்கு அன்பளிக்க வேண்டும். இந்த நான்கு காசுகளில் நீங்கள் அன்பளிக்கும் ஒவ்வொரு இரண்டு காசுகள

ஐந்திணைக்கோயிலின் ஐந்து தெய்வங்களுக்கும் தமிழ்முன்னோர் நிறுவிய அடிப்படை

படம்
கடவுளும், இறையும் பல்வேறு உருவாக்கங்களில் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது இறை கூறு என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர் என்று பேசுவதற்கானது இந்தக் கட்டுரை. தமிழ்முன்னோர் நிறுவியுள்ள முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில்- இடம் என்பது விசும்பு என்கிற திரம், அது கடவுள் என்றும் பேசப்படுகிறது. காலம் என்பது அடிப்படையில் தனிஒன்றுகள், வழிநிலையில் நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரம், அது இறை என்றும் பேசப்படுகிறது.  கடவுளும், இறையும் பல்வேறு உருவாக்கங்களில் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு. கடவுள் கூறையும், இறைக் கூறையும் தெய்வமாக வழிபடுவது தமிழர் மரபு.  கடவுள் ஒன்றே ஒன்று. இறை நான்கு. அவற்றின் கூறுகளாக அமைந்த தெய்வங்கள் பற்பல. ஐந்திரம் என்ற பொருள்பொதிந்த சொல்லில் தமிழர் நிறுவிய ஐந்து திரங்கள் இந்தக் கடவுளும் இறையும்.  கடவுள்- வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளை உடைய ஒற்றைத் திரம் ஆகும். இறை- நிலம், நீர், தீ,